திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 325 பேருக்கு கொரோனா உறுதி

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 6,655 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரேநாளில் 325 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்து 470 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 89 ஆயிரத்து 532 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,966 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 77,338 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னைக்கு அண்டை மாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 6,655 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரேநாளில் 325 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,980 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,014 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 127 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகாரிகள், ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து சுகாதார பணிகளை மேற்கொள்வதற்காக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று ஒரு நாள் மூடப்பட்டது.