விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மேலும் 200 பேருக்கு கொரோனா உறுதி

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மேலும் 200 பேருக்கு கொரோனா உறுதியாயானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,795 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 33 ஆயிரத்து 969 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பரவியவர்களில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 74 ஆயிரத்து 172 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மேலும் 200 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,795 ஆக அதிகரித்துள்ளது. இதில் சிகிச்சை பலனின்றி 65 பேர் கொரோனவுக்கு பலியாகி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை ஆறாயிரத்திற்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.