திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 145 பேருக்கு கொரோனா உறுதி

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 3,830 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று 145 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் கடந்த மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மாநிலம் முழுவதும் மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்து 74 அதிகரித்துள்ளது. ஆனாலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,201 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 58,327 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னைக்கு அண்டை மாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 3,830 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரேநாளில் 145 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,975 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,372 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 69 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகம் முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன் ஜூலை 31-ந் தேதி வரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஜூலை 5-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.