சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 75.83 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்து 23 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 02 ஆயிரத்து 436 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ரஷ்யா கடந்த 24 மணி நேரத்தில் 8,779 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 02 ஆயிரத்து 436 ஆக அதிகரித்துள்ளது. ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் அதிகபட்சமாக 2 லட்டம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ரஷ்யாவில் கொரோனாவுக்கு 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனாவுக்கான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் அங்கு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இவ்வாறு கூறினார்கள்.