வேலூர் மாவட்டத்தில் புதிதாக 186 பேருக்கு கொரோனா உறுதி

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 186 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று புதிதாக 5 ஆயிரத்து 447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 35 ஆயிரத்து 855 ஆக அதிகரித்துள்ளது.

நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 45 ஆயிரத்து 135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கொரோனா பாதிப்பில் இருந்து 5 லட்சத்து 80 ஆயிரத்து 736 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 984 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 15,738 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 186 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,924 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 14,617 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 254 பேர் உயிரிழந்துள்ளனர்.