தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 986 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 723 ஆக அதிகரித்துள்ளது.
நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைக்கு பின் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 471 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 526 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மாநிலத்தில் நோய் தொற்று தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 494 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு பலியானோர் விவரம்:- அரியலூர் - 4 செங்கல்பட்டு - 227 சென்னை - 2,011 கோவை - 39 கடலூர் - 21 தர்மபுரி - 3 திண்டுக்கல் - 35 ஈரோடு - 8 கள்ளக்குறிச்சி - 19 காஞ்சிபுரம் - 89 கன்னியாகுமரி - 32 கரூர் - 9 கிருஷ்ணகிரி - 14 மதுரை - 210 நாகை - 3 நாமக்கல் - 5 நீலகிரி - 2 பெரம்பலூர் - 3 புதுக்கோட்டை - 21 ராமநாதபுரம் - 57 ராணிப்பேட்டை - 28 சேலம் - 23 சிவகங்கை - 33 தென்காசி - 12 தஞ்சாவூர் - 18 தேனி - 48 திருப்பத்தூர் - 9 திருவள்ளூர் - 208 திருவண்ணாமலை - 51 திருவாரூர் - 1 தூத்துக்குடி - 29 திருநெல்வேலி - 25 திருப்பூர் - 6 திருச்சி - 58 வேலூர் - 43 விழுப்புரம் - 32 விருதுநகர் - 57