ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,159 பேருக்கு கொரோனா

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,159 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 8,61,423 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் குறித்த விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் புதிதாக 5,159 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டில் மொத்த பாதிப்பு 8,61,423 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 144 பேர் உள்பட இதுவரை 14,351 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் தற்போது வரை 6,61,471 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர்.

நேற்று மட்டும் ஒரேநாளில் 7,878 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது. முன்னதாக அமெரிக்கா, பிரேசில், இந்தியா முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன.