பாலிவுட் பாடகர் அபிஜீத் பட்டாசார்யாவின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
1980களில் பாலிவுட்டில் பாடகராக அறிமுகமான அபிஜீத் இதுவரை ஆறாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். இந்நிலையில் தன்னுடைய மகன் துருவ், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
வெளிநாட்டுக்கு என்னுடைய மகன் செல்லவிருந்தார். அதற்காக அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் தான் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அவருக்குப் பெரிய அளவில் அறிகுறிகள் இல்லை. தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். கவலைப்பட ஒன்றுமில்லை.
நான்
தற்போது படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறேன். கொல்கத்தாவில் கொரோனா
பரிசோதனை மேற்கொண்ட பிறகே படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியும், இதனால்
கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது எனக்கு கொரோனா இல்லை என்று தெரிய வந்தது
என்றார்.