தமிழகத்தில் கொரோனா பரவல் நிலவரம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டு வருவது மக்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.

இதனை தூது தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று புதிதாக மட்டும் 15 ஆண்கள், 24 பெண்கள் உள்பட மொத்தம் 39 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு 5-க்கு கீழ் குறைந்துள்ளது.

இதையடுத்து தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. மருத்துவமனையில் 173 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி 419 பேர் சிகிச்சையில் உள்ளனர் என அதில் கூறப்பட்டுள்ளது.