தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 58 ஆயிரத்து 818 பேருக்கு கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பான விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 426 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்து 114 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் அடங்குவர்.

நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 57 ஆயிரத்து 490 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 927 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 72 ஆயிரத்து 883 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 82 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 741 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சராசரியாக 60 ஆயிரம் பேருக்கு தினமும் கொரோனா பரிசோதனை என்ற எண்ணிக்கை நேற்றும் இன்றும் வெகுவாக குறைந்துள்ளது. நேற்று 59 ஆயிரம் பேருக்கு செய்யப்பட்ட பரிசோதனை எண்ணிக்கை இன்று 58 ஆயிரமாக குறைந்துள்ளது.

அதன்படி மாநிலத்தில் நேற்று 58 ஆயிரத்து 818 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 42 ஆயிரத்து 818 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 60 ஆயிரத்து 794 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் மக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 36 ஆயிரத்து 660 ஆக அதிகரித்துள்ளது.

பரிசோதனையை அதிகரித்து வைரஸ் பரவியவர்களை கண்டுபிடித்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதாலேயே கொரோனாவை விரைவாக கட்டுப்படுத்த முடியும். எனவே, தமிழக அரசு பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.