தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தீவிரமாக சென்னையை போன்று அனைத்து மாவட்டங்களிலும் தற்போது பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 3 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை நேற்று புதிய உச்சமாக 4 ஆயிரத்து 343 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 98 ஆயிரத்து 392 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தொடவுள்ளது. இதில் விமானம் மற்றும் ரயில் மூலம் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 1,162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 41 ஆயிரத்து 47 பேர் தற்போது மாநிலம் முழுவதும் சிகிச்சையில் உள்ளனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 56 ஆயிரத்து 21 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தமிழகத்தில் இதுவரை கொரோனா தாக்குதலால் 1,321 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:- அரியலூர் - 463 செங்கல்பட்டு - 5,807 சென்னை - 62,598 கோவை - 608 கடலூர் - 1,124 தர்மபுரி - 93 திண்டுக்கல் - 601 ஈரோடு - 191 கள்ளக்குறிச்சி - 1,071 காஞ்சிபுரம் - 2,151 கன்னியாகுமரி - 436 கரூர் - 149 கிருஷ்ணகிரி - 156 மதுரை - 3,133 நாகை - 260 நாமக்கல் - 97 நீலகிரி - 117 பெரம்பலூர் - 164 புதுக்கோட்டை - 234 ராமநாதபுரம் - 1,069 ராணிப்பேட்டை - 891 சேலம் - 1,034 சிவகங்கை - 331 தென்காசி - 387 தஞ்சாவூர் - 465 தேனி - 801 திருப்பத்தூர் - 184 திருவள்ளூர் - 4,167 திருவண்ணாமலை - 2,029 திருவாரூர் - 496 தூத்துக்குடி - 1,028 திருநெல்வேலி - 879 திருப்பூர் - 194 திருச்சி - 755 வேலூர் - 1,521 விழுப்புரம் - 986 விருதுநகர் - 614