தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8 தினங்களுக்கு பின்பு நேற்று இறங்குமுகத்துக்கு வந்துள்ளது. நேற்று புதிதாக 3 ஆயிரத்து 827 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 66 ஆயிரத்து 571 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனா தமிழகத்தில் இதுவரை 1,571 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழத்தில் நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படுள்ளனர்.

மாவட்ட வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-
அரியலூர் - 475
செங்கல்பட்டு - 6,853
சென்னை - 70,017
கோவை - 802
கடலூர் - 1,277
தர்மபுரி - 128
திண்டுக்கல் - 725
ஈரோடு - 288
கள்ளக்குறிச்சி - 1,246
காஞ்சிபுரம் - 2,729
கன்னியாகுமரி - 638
கரூர் - 170
கிருஷ்ணகிரி - 200
மதுரை - 4,338
நாகை - 310
நாமக்கல் - 113
நீலகிரி - 150
பெரம்பலூர் - 170
புதுக்கோட்டை - 375
ராமநாதபுரம் - 1,454
ராணிப்பேட்டை - 1,193
சேலம் - 1,288
சிவகங்கை - 564
தென்காசி - 468
தஞ்சாவூர் - 499
தேனி - 1,128
திருப்பத்தூர் - 282
திருவள்ளூர் - 4,983
திருவண்ணாமலை - 2,534
திருவாரூர் - 553
தூத்துக்குடி - 1,271
திருநெல்வேலி - 1,114
திருப்பூர் - 220
திருச்சி - 1,004
வேலூர் - 1,980
விழுப்புரம் - 1,232
விருதுநகர் - 975