தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8 தினங்களுக்கு பின்பு நேற்று இறங்குமுகத்துக்கு வந்துள்ளது. நேற்று புதிதாக 3 ஆயிரத்து 827 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 66 ஆயிரத்து 571 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனா தமிழகத்தில் இதுவரை 1,571 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழத்தில் நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படுள்ளனர். மாவட்ட வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:- அரியலூர் - 475 செங்கல்பட்டு - 6,853 சென்னை - 70,017 கோவை - 802 கடலூர் - 1,277 தர்மபுரி - 128 திண்டுக்கல் - 725 ஈரோடு - 288 கள்ளக்குறிச்சி - 1,246 காஞ்சிபுரம் - 2,729 கன்னியாகுமரி - 638 கரூர் - 170 கிருஷ்ணகிரி - 200 மதுரை - 4,338 நாகை - 310 நாமக்கல் - 113 நீலகிரி - 150 பெரம்பலூர் - 170 புதுக்கோட்டை - 375 ராமநாதபுரம் - 1,454 ராணிப்பேட்டை - 1,193 சேலம் - 1,288 சிவகங்கை - 564 தென்காசி - 468 தஞ்சாவூர் - 499 தேனி - 1,128 திருப்பத்தூர் - 282 திருவள்ளூர் - 4,983 திருவண்ணாமலை - 2,534 திருவாரூர் - 553 தூத்துக்குடி - 1,271 திருநெல்வேலி - 1,114 திருப்பூர் - 220 திருச்சி - 1,004 வேலூர் - 1,980 விழுப்புரம் - 1,232 விருதுநகர் - 975