மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,672 ஆக உயர்வு

மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 1,477 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 195 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 74,622 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 41,357 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 957-ஆக அதிகரித்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இதனால் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, தேனி மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 1,477 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 195 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,672 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 520 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 13 பேர் உயிரிழந்துள்ளனர்.