கள்ளை அமலுக்கு கொண்டு வந்தால்தான் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும்

பெருந்துறை: கள்ளை அமலுக்கு கொண்டு வரணும்... கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்றால் கள்ளை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கொங்கு நாட்டின் பாரம்பரிய வள்ளி கும்மி நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திருச்செங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பங்கேற்று நடனத்தை கண்டு ரசித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கள் அமலுக்கு வரும் பட்சத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுவதோடு சந்து கடைகள் அகற்றப்படும். கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்றால் கள்ளை அமலுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.