முன்னாள் அதிபர் டிரம்பிற்கு அபராதம் விதித்து கோர்ட் உத்தரவு

அமெரிக்கா: முன்னாள் அதிபருக்கு கோர்ட் உத்தரவு... பத்திரிகையாளரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் 5 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

பத்திரிக்கையாளர் ஜீன் கரோலை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கும், அவரை அவமதிப்பு செய்ததற்கும் டிரம்ப் பொறுப்பேற்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஆயினும் டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற எழுத்தாளரின் குற்றச்சாட்டை மன்ஹாட்டன் நடுவர் மன்ற நீதிபதி நிராகரித்தார். இந்த தீர்ப்பு குறித்து கருத்துத் தெரிவித்த டிரம்ப் தமக்கு நேர்ந்த அவமானம் என்று கூறினார்.

இதுமட்டுமின்றி தற்போது மேலும் இரண்டு பெண்கள் தங்களை பாலியல் ரீதியாக முன்னாள் அதிபர் துன்புறுத்தியதாக வழக்கு தொடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.