கதிர் வரும் நேரத்தில் விளை பயிர்களை நாசம் செய்வதா: பாமக தலைவர் அன்புமணி கண்டனம்

கடலூர்: கதிர் வரும் நேரத்தில் விளை பயிர்களை நாசம் செய்வதா என்று என்.எல்.சி. விவகாரம் குறித்து அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை தொடர்ந்தால் கடலூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் சாலை மறியல் நடத்தப்படும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்தின் பிரதான வளைவு வாயில் முன் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தின் போது பேசிய அன்புமணி, சாலை மறியல் நடந்தால் அது ஒரு நாள் அடையாள போராட்டமாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

கதிர் வரும் நேரத்தில் விளை பயிர்களை நாசம் செய்வது கர்ப்பிணிப் பெண்ணின் கருவை அழிப்பதற்கு ஈடானது என்று குறிப்பிட்டுள்ள அன்புமணி, நிலத்தடி நீரை உறிஞ்சி மண்ணை மலடாக்குவது தான் வளர்ச்சியா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.