வாரணாசி கங்கை கரையில் தேவ தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்

உத்தரபிரதேசம்: தேவ தீபாவளி பண்டிகை... கார்த்திகை மாத பவுர்ணமி தினத்தில் உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தேவ தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தேவ தீபாவளியை முன்னிட்டு வாரணாசியில் கங்கை கரையில் அகல் விளக்கு ஏற்றி மக்கள் வழிபட்டனர்.

இந்தியாவுக்கான டென்மார்க் தூதர் உட்பட பல வெளிநாட்டினரை வரவேற்று தேவ தீபாவளி பண்டிகையின் முக்கியத்துவம் குறித்து உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யா நாத் விளக்கம் கொடுத்தார்.

இது போன்று குஜராத் மாநிலத்திலும் தேவ தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. துவராகாவில் நடைபெற்ற விழாவில் பொது மக்கள் பங்கேற்று அகல் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர்.