இருதரப்பினர் பிரச்சினையால் பொது இடத்தில் வைத்து ரேஷன் பொருட்கள் வழங்கல்

புதுக்கோட்டை: போலீஸ் பாதுகாப்புடன் விநியோகம்... புதுக்கோட்டை மாவட்டம் மின்னாத்தூர் ஊராட்சியில் நிலையான கடை இல்லாததால் , போலீஸ் பாதுகாப்புடன் தெருவில் வைத்து அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.

நரங்கியன்பட்டி கிராமத்தில் இரு பிரிவு மக்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக வாகனங்களில் எடுத்துச்சென்று இரு இடங்களில் வைத்து ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

தற்போது ஒரே இடத்தில் வைத்து பொருட்கள் வழங்குவதாக கூறிய நிலையில் மற்றொரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்ததால் போலீஸ் பாதுகாப்புடன் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த பிரச்சனையை தீர்க்க இருதரப்பினருக்கும் பொதுவான இடத்தில் ரேசன் கடையை அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது