தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் நேற்று புதிதாக 1 ஆயிரத்து 624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 71 ஆயிரத்து 619 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 12 ஆயிரத்து 245 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1 ஆயிரத்து 904 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 47 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 622 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-
அரியலூர் - 24 செங்கல்பட்டு - 860 சென்னை - 4,354 கோவை - 698 கடலூர் - 134 தர்மபுரி - 135 திண்டுக்கல் - 68 ஈரோடு - 303 கள்ளக்குறிச்சி - 81 காஞ்சிபுரம் - 404 கன்னியாகுமரி - 133 கரூர் - 246 கிருஷ்ணகிரி - 237 மதுரை - 245 நாகை - 283 நாமக்கல் - 249 நீலகிரி - 144 பெரம்பலூர் - 1 புதுக்கோட்டை - 114 ராமநாதபுரம் - 45 ராணிப்பேட்டை - 122 சேலம் - 610 சிவகங்கை - 68 தென்காசி - 67 தஞ்சாவூர் - 160 தேனி - 26 திருப்பத்தூர் - 53 திருவள்ளூர் - 595 திருவண்ணாமலை - 166 திருவாரூர் - 188 தூத்துக்குடி - 115 திருநெல்வேலி - 121 திருப்பூர் - 623 திருச்சி - 128 வேலூர் - 209 விழுப்புரம் - 145 விருதுநகர் - 73 விமானநிலைய கண்காணிப்பு -18