மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு 12 ஆயிரத்து 245 பேர் சிகிச்சை

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் நேற்று புதிதாக 1 ஆயிரத்து 624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 71 ஆயிரத்து 619 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 12 ஆயிரத்து 245 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1 ஆயிரத்து 904 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 47 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 622 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-

அரியலூர் - 24
செங்கல்பட்டு - 860
சென்னை - 4,354
கோவை - 698
கடலூர் - 134
தர்மபுரி - 135
திண்டுக்கல் - 68
ஈரோடு - 303
கள்ளக்குறிச்சி - 81
காஞ்சிபுரம் - 404
கன்னியாகுமரி - 133
கரூர் - 246
கிருஷ்ணகிரி - 237
மதுரை - 245
நாகை - 283
நாமக்கல் - 249
நீலகிரி - 144
பெரம்பலூர் - 1
புதுக்கோட்டை - 114
ராமநாதபுரம் - 45
ராணிப்பேட்டை - 122
சேலம் - 610
சிவகங்கை - 68
தென்காசி - 67
தஞ்சாவூர் - 160
தேனி - 26
திருப்பத்தூர் - 53
திருவள்ளூர் - 595
திருவண்ணாமலை - 166
திருவாரூர் - 188
தூத்துக்குடி - 115
திருநெல்வேலி - 121
திருப்பூர் - 623
திருச்சி - 128
வேலூர் - 209
விழுப்புரம் - 145
விருதுநகர் - 73
விமானநிலைய கண்காணிப்பு -18