தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் 2 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. நேற்று புதிதாக 2 ஆயிரத்து 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 449 ஆக அதிகரித்துள்ளது.
இதில் உள்மாநிலத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் 2 ஆயிரத்து 75 பேர். விமான நிலைய கண்காணிப்பில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 1 நபர், உள்நாட்டில் இருந்து வந்தவர்கள் 15 பேர். வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலமாக தமிழகம் வந்தவர்கள் 2 பேர். மேலும், ரெயில் மற்றும் சாலைமார்க்கமாக வெளிமாநிலங்களில் இருந்து சொந்த மாவட்டம் வந்தவர்களில் 22 பேர் ஆகும். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 666 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட வாரியாக நேற்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:- அரியலூர் - 5 செங்கல்பட்டு - 95 சென்னை - 1,322 கோவை - 29 கடலூர் - 5 தர்மபுரி - 2 திண்டுக்கல் - 22 ஈரோடு - 1 கள்ளக்குறிச்சி - 7 காஞ்சிபுரம் - 39 கன்னியாகுமரி - 7 கரூர் - 3 கிருஷ்ணகிரி - 12 மதுரை - 58 நாகை - 8 நீலகிரி - 6 புதுக்கோட்டை - 8
ராமநாதபுரம் - 21 ராணிப்பேட்டை - 4 சேலம் - 16 சிவகங்கை - 18 தென்காசி - 11 தஞ்சாவூர் - 13 தேனி - 15 திருப்பத்தூர் - 8 திருவள்ளூர் - 85 திருவண்ணாமலை - 37 திருவாரூர் - 10 தூத்துக்குடி - 26 திருநெல்வேலி - 18 திருப்பூர் - 2 திருச்சி - 13 வேலூர் - 103 விழுப்புரம் - 31 விருதுநகர் - 15