மேட்டூர் அணையிலிருந்து மேலும் 15 நாட்களுக்கு தண்ணீரைத் திறக்க .... தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை

சென்னை: தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை .... மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்கு மேலும் 15 நாட்களுக்கு தண்ணீரைத் திறக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை அடுத்து இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “கடந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து மே 24ஆம் தேதி பாசனத்திற்காக நீர் திறந்தபொழுதும், மழை வெள்ள பாதிப்புகளால் சம்பா சாகுபடி 1 மாத காலம் தாமதமாக தொடங்கியதால் பயிர்கள் இன்னும் அறுவடைக்கு தயார் நிலையை எட்டவில்லை.

இதையடுத்து இந்த நிலையில் வழக்கமான நிகழ்வாக ஜனவரி 28-ம் தேதி தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டிருப்பது, டெல்டா விவசாயிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் சம்பா சாகுபடி நிறைவடையாத நிலையில், சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்பதால், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று மேலும் 15 நாட்களுக்கு தண்ணீரைத் திறக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.