திருப்பூர் நகரில் முக்கிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் தடை

திருப்பூர் : மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , “திருப்பூர் மாநகரில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முக்கிய பகுதிகளில் மின் சாரம் இருக்காது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

இதையடுத்து மின்தடை ஏற்படும் பகுதிகள்குமார் நகர் துணை மின் நிலையம் : ராமமூர்த்தி நகர், பி.என்.ரோடு. ராமையா காலனி, ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி நகர், கொங்கு நகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், பவானி நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட் நகர், கொங்கு மெயின் ரோடு. வ.ஊ.சி. நகர், டி.எஸ்.ஆர் லே அவுட், முத்து நகர், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம், என்.ஆர்.கே புரம். வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, 60 ரோடு, இட்டேரி ரோடு, அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி, திருமலை நகர் சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ் நகர், புதிய பஸ் நிலையம் மற்றும் லட்சுமி நகர்.

மேலும் சந்தைபேட்டை துணை மின் நிலையம் : சந்தைபேட்டை துணை மின் நிலையத்திற்குட்பட்ட அரண்மனைப்புதூார், தட்டான் தோட்டம், எம்.ஜி.புதுார், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, ஷெரிப் காலணி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.நகர் கே.எம்.ஜி.நகர், பட்டுகோட்டையார் நகர், திரு.வி.க.நகர், கருப்பகவுண்டம்பாளையம், கோபால்நகர், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி.நகர், கே.வி.ஆர் நகர், பூச்சக்காடு, மங்கலம் ரோடு. ஆகிய பகுதிகளிலும்

பழவஞ்சிபாளையம் : பெரியார் காலணி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யுனியன் மில் ரோடு, மிஷின் வீதி, காமராஜ் ரோடு, புது மார்கெட் வீதி, ராயபுரம், எஸ்டேட் பேங்க் காலணி, காதர்பேட்டை, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதூர் மெயின் ரோடு, தாராபுரம் ரோடு, கரட்டாங்காடு, செரங்காடு, டி.ஏ.பி.நகர், என்.பி.நகர், காளிநாதம்பாளையம், பழவஞ்சிபாளையம்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலக துணை மின் நிலையம் : பூம்புகார், இந்திரா நகர், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, வித்யாலயம், பாரதிநகர், குளத்துபாளையம், செல்வலட்சுமி நகர், வீரபாண்டி, பொது சுத்திகரிப்பு நிலைய பகுதிகள், கருப்பக்கவுண்டன்பாளையம், கே.ஆர்.ஆர். தோட்டம் ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது‌” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.