சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை


சென்னை: 40 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை ...தமிழகத்தில்மணல் கடத்தல் தொடர்பாக 30 இடங்களில் அமலாக்கத்துறை கடந்த வாரம் சோதனை நடத்தியது. மணல் கொள்ளை, மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள், அவர்களுடன் தொடர்பிலிருந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதையடுத்து திண்டுக்கல், புதுக்கோட்டை, நாமக்கல்லிலும் அமலாக்கத்துறை சோதனை தொடர்கிறது. மணல் விற்பனையில் முறைகேடு, சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் ஒன்று வெளியானது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோத பண பரிமாற்றம் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் பிரபல தொழிலதிபர் சண்முகம் வீட்டில் சோதனை நடத்த அமலாக்கத் துறையினர் வருகை புரிந்து உள்ளனர்