ரஷ்யா - உக்ரைன் நாடுகளிடையே போர் கைதிகள் பரிமாற்றம்

உக்ரைன்: போர் கைதிகள் பரிமாற்றம்... ரஷ்யா - உக்ரைன் நாடுகளிடையே நடைபெற்ற போர் கைதிகள் பரிமாற்றத்தில் இரு தரப்பில் இருந்தும் தலா 45 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

போர் தொடங்கி 17 மாதங்கள் கடந்துள்ள நிலையில், உக்ரைனும் ரஷ்யாவும் அவ்வப்போது கைதிகளை பரிமாறிக் கொள்கின்றன.

அந்த வகையில் வியாழன் அன்று விடுவிக்கப்பட்ட இரு நாட்டு வீரர்களும், மகிழ்ச்சியுடன் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

இதுவரை ரஷ்ய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட 2,576 உக்ரைனியர்கள் விடுவிக்கப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் அலுவலக அதிகாரி தெரிவித்துள்ளார். ரஷ்ய தரப்பில் எத்தனை பேர் விடுக்கப்பட்டனர் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.