காட்டுப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு

மும்பை அருகே காட்டுக்குள் இருந்து ஊருக்கு வந்த சிறுத்தையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வனப்பகுதியில் இருந்து வழிமாறி வந்த சிறுத்தை ஒன்று மும்பை அருகே உள்ள ஆரே பால் காலனியில் மாட்டுத் தொழுவத்தில் புகுந்தது. அங்கிருந்தவர்கள் சிறுத்தை கண்டு பீதியடைந்து, சிறுத்தையை விரட்ட முயன்றனர்.

ஆனால் சிறுத்தை கோபமாக சீறியது. இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் சிறுத்தையை விரட்ட மக்கள் சப்தம் போட்டனர். ஆனால் சிறுத்தை ஆக்ரோஷமாக தொடர்ந்து சீற்றத்துடன் மக்களை நோக்கி பார்த்தது. இந்த காட்சிகள் நடுநடுங்க வைத்துள்ளது.

தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் சிறுத்தையை பிடித்து அருகே உள்ள வனப்பகுதிக்குள் விட்டனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.