டில்லியில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை கடந்தது

9 ஆயிரத்தை கடந்தது... டில்லியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், கொரோனா தொற்று நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தலைநகர் டில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 438 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,333 ஆக அதிகரித்துள்ளது.