ரஷியாவில் உள்ள வணிக வளாகத்தில் வெப்ப நீர் குழாய் வெடித்ததால் பரபரப்பு

மாஸ்கோ: ரஷ்யாவின் மேற்கு மாஸ்கோ நகரில் ஷாப்பிங் மால் உள்ளது. இதில் நேற்று ஏராளமானோர் ஷாப்பிங் செய்து வருகின்றனர். இந்நிலையில் சுடுநீர் குழாய் திடீரென வெடித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதில் கொதித்த தண்ணீர் மாலின் ஒரு பகுதியில் பரவியது. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அப்பகுதியில் 20க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர்.

இதை நகர மேயர் செர்ஜ் சோபியானின் உறுதிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. ஒருபுறம் வாடிக்கையாளர்களும், மால் ஊழியர்களும் சம்பவ இடத்தில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருப்பினும், மறுபுறம், கட்டிடத்தின் கதவு பகுதிகளில் இருந்து சூடான நீர் வெளியேறுகிறது. இதையடுத்து ரஷ்ய உளவுத்துறையினர் குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.