சித்திரை புத்தாண்டில் வறிய நிலையில் உள்ளவர்களுக்கு இலவச முட்டை

கொழும்பு: இலவசமாக வழங்க முடிவு... எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் போது, முட்டைகளை கொள்வனவு செய்ய முடியாத வறிய மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க தயாராகி வருவதாக, அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், அந்த காலப்பகுதியில் முட்டையினை 35 முதல் 40 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர சங்கத்தின் தலைவர் ஆர்.எம் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சில வெதுப்பக உரிமையாளர்கள் முட்டை விலையினை காரணம் காட்டி, வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

தற்போது, முட்டை கோழிகளின் பெருக்கங்கள் அதிகரித்துள்ளதால், எதிர்காலத்தில் முட்டை விலையினை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.