தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த அரசு ஊழியர்கள் கோரிக்கை

தமிழகம்: நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதாய் தொடர்ந்து சில மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன.

தமிழக அரசு ஊழியர்களும் , பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இருந்தாலும் திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டாகி உள்ள நிலையில், இதுவரை பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற விழாவில் வலியுறுத்தப்பட்டு உள்ளது

கோயம்புத்தூர் பொள்ளாச்சி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் புதிய உறுப்பினர்கள் இணைப்பு, புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு போன்ற முப்பெரும் விழா பொள்ளாச்சியில் நடைபெற்றது.

அவ்விழாவில் தேர்தல் அறிக்கையில் கூறியவாறு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மேலும் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.