தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆயுத பூஜை, சரவஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்து தெரிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. எனவே இதனையொட்டி தலைவர்கள் பலரும் மக்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: அதில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பும் பாசமும் சகோதரத்துவமும் கொண்ட ஒரே குடும்பம் போல இந்த பண்டிகைகளை உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும். சரஸ்வதி தேவி தனது மெய்ஞானத்தால் அறியாமை என்ற இருளை அகற்றி, நமது மக்களுக்கு வளமையையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும்.

மேலும் துர்கா தேவி, நம் மக்களை ஒரே குடும்பமாய் ஒன்றிணைத்து, அனைத்து தடைகளையும் தகர்த்து நமது தேசிய இலக்கை அடைவதற்கான வலிமையை நமக்கு வழங்கட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.