தமிழகத்தில் இன்று இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்

சென்னை: தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை வெளுத்துவாங்கி கொண்டிருக்கிறது. அந்த வகையில், இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர்,

இதனை அடுத்து திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மழை வருகிற அக்.17 ஆம் தேதி வரைக்கும் நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தாலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் அசௌகரியம் தெரிவித்து உள்ளனர். எனவே அதன்படி, ஈரோடு, திருவள்ளூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பை விட 3டிகிரி அளவுக்கு வெப்பம் அதிகரித்துள்ளது.

சென்னையை பொருத்த வரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் கனமழை பொழியலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று தென்தமிழக கடலோர பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதை தவிர்த்துக்கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.