கனமழை ..சிக்கிமில் அக்.15 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

சிக்கிம் : 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த அரசு உத்தரவு ..சிக்கிம் மாநிலத்தில் கடந்த அக். 4 ஆம் தேதி திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விட்டது.

அதை தொடர்ந்து வெள்ள பாதிப்பு அதிகமாக இருப்பதால்வருகிற அக். 15 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது.எனவே அதன் படி அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் , பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் வருகிற அக். 15 ஆம் தேதி வரை மூடப்படும் என்று தெரிவிக்கப்படுள்ளது.

மேலும் பள்ளிகள் மூடப்படுவதால் 9 முதல் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு படிப்பு பாதிக்கப்படும் என்பதால், அவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

சிக்கிம் மாநிலத்தில் பெரும் அழிவை ஏற்படுத்தும் மேக வெடிப்பைக் கருத்தில் கொண்டு 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளையும் மூடுமாறு சிக்கிம் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.