தமிழகத்தில் 3 நாட்களுக்கு பெய்ய இருக்கும் கனமழை

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவ மழை காரணமாக நவம்பர் டிசம்பர் மாதங்களில் தமிழகம் முழுவதும் அதிக மழை பெய்யும். அந்த வகையில் கடந்த மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

கடந்த வாரம் பெய்த மழையால் ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டது. ஆனால் பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருந்ததால் சேதாரங்கள் தவிர்க்கப்பட்டது.

இதனை அடுத்து இந்த நிலையில் தற்போது தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தில் நவம்பர் 20, 21, 22 ஆகிய 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதனால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு பெய்ய இருக்கும் கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகங்கள் தயாராக இருக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நோய் தொற்று ஏற்பட பாதிப்புகள் இருப்பதால் சுகாதாரத்துறையும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.