அதிக செலவில்லாமல் கரப்பான் பூச்சியை துரத்த சில யோசனைகள்

சென்னை: கரப்பான் பூச்சியை எளிதில் துரத்தலாம்... வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை அதிகரித்தால் அதிகம் செலவு செய்து மருந்துகளை வாங்கி தெளிப்பதோ அல்லது பூச்சி மருந்து அடிக்க ஆட்களை வரவழைப்பது என செய்ய வேண்டிய அவசியமில்லை.

அப்படி வீட்டில் அதிக அளவில் ரசாயனங்களை பயன்படுத்துவது வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகளுக்கும் நல்லதல்ல. இதனால் பணமும் அதிகமாக செலவாகும். எனவே கரப்பான் பூச்சிகளை விரட்ட எளிய வீட்டு வைத்தியங்களை பயன்படுத்துவதே போதுமானது.
பேக்கிங் சோடாவைப் பயன்படுத்துங்கள்: கரப்பான் பூச்சிகளைப் போக்க பேக்கிங் சோடா சிறந்தது. ஒரு கிளாஸ் தண்ணீரில் பேக்கிங் சோடாவை நன்கு கலந்து, அதில் சிறிது சர்க்கரை சேர்க்கவும். இந்த கலவையை கரப்பான் பூச்சிகள் அதிகம் வரும் இடங்களில் தெளிக்கவும்.

மண்ணெண்ணெய் பயன்படுத்த அடுத்த அரை மணி நேரத்தில் எல்லா கரப்பான் பூச்சிகளும் ஓடிவிடும். இதற்கு ஸ்ப்ரே பாட்டிலில் மண்ணெண்ணெய்யை நிரப்பி கரப்பான் பூச்சிகள் அதிகம் காணப்படும் இடங்களில் தெளிக்கவும். கரப்பான் பூச்சிகள் அதன் வாசனை தாங்க முடியாமல் ஓடிவிடும்.கரப்பான் பூச்சிகளை விரட்ட பலா இலை பொடியையும் பயன்படுத்தலாம். இதற்கு இலையை நைசாக அரைக்கவும். இதற்குப் பிறகு இந்தப் பொடியை வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் சிறிது சிறிதாகத் தூவவும்.
கரப்பான் பூச்சிகளை விரட்ட பெப்பர்மின்ட் ஆயிலையும் பயன்படுத்தலாம். இதற்கு, ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை கிளாஸ் பெப்பர்மின்ட் எண்ணெயை கலக்கவும். பின் அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி வீட்டில் தெளிக்கவும்.