அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்

புதுடில்லி: உயர் மட்ட ஆலோசனை கூட்டம்... டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீர், லே-லடாக் பகுதிகளின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஜம்முவில் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. எல்லைப் பகுதிகளில் நடைபெறும் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும், எல்லைப் பகுதிகளில் ஆளில்லா விமானங்கள் அத்துமீறி நுழைவது, காஷ்மீர் பண்டிட்டுகள் மீதான தாக்குதல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டத்தில் காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை மற்றும் காஷ்மீர் போலீசார் கலந்து கொண்டனர்.