இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

மேலும் தென் தமிழகத்திலும் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இந்த தொடர் கனமழையின் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

மாவட்ட முழுவதிலும் பரவலாக கன மழை பெய்து கொண்டு வருகிறது . இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார்