சாத்தான்குளம் காவல்நிலைய சிசிடிவி காட்சிகளை மீட்கும் நடவடிக்கை தொடங்கியதாக ஐ.ஜி., சங்கர் தகவல்

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் அழிந்து போன சிசிடிவி காட்சிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ஐ.ஜி. சங்கர் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில், சிபிசிஐடி போலீசார் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஐஜி சங்கர், இரட்டைக் கொலையில் தொடர்புடைய காவல்துறையினர் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த விசாரணையில், மேலும் யாருக்கேனும் தொடர்பு இருப்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீசாரை, அடுத்த வாரத்தில் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் அழிந்து போன சிசிடிவி காட்சிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஐ.ஜி. சங்கர் தெரிவித்தார்.