டெல்லியில் கடந்த 10 தினங்களில் மட்டும் 19,760- பேருக்கு கொரோனா உறுதி

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. இதையடுத்து கடந்த 10 தினங்களில் மட்டும் 19,760- பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று , டெல்லியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கையும் 50 சதவீதம் உயர்ந்து இருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி தொற்று பரவல் விகிதம் 11.41 ஆக இருந்தது. 2 பேர் பலியாகி இருந்தனர். ஆனால், அடுத்த சில நாட்களில் தொற்று பரவல் 2 மடங்காக அதிகரித்துள்ளது.

கடந்த 180 நாட்களில் இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பால் ஒரே நாளில் நேற்று 8 பேர் உயிரிழந்து இருந்தனர். பரவல் விகிதமும் 17.83 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த 10 தினங்களில் 40 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மேலும் கொரோனா பரவல் வேகம் எடுத்தாலும் பெரும்பாலானோருக்கு அறிகுறிகள் இல்லை எனவும் மக்கள் அச்சம் அடைய வேண்டாம் எனவும் கெஜ்ரிவால் அவர்கள் கூறியுள்ளார்.