இந்தியாவில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவாக தினசரி கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்தது

இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் 5,335 பேருக்கு கொரோனா உறுதி .... நாடு முழுவதும் மீண்டும் கொரோனா அலை வேகமெடுக்க தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் கொரோனாவை தடுக்க மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொண்டு வருகிறது.

இருந்தாலும் தினசரி பாதிப்பு அதிகமாக பரவி கொண்டு வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட்டு கொண்டு வருகிறது.

எனவே அதன் படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்புக்கு தற்போது 25,587 பேர் சிகிச்சை பெற்று வருவதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து தினமும் 5000க்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இது குறித்து அரசு விரைவில் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.