ஒரே நாளில் கனடாவில் 230 பேர் கொரோனாவால் பாதிப்பு

கடந்த ஒரே நாளில் கனடாவில் 230 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக கனடா உள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை வெகுவாக அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 451 ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 981பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும், ஆறாயிரத்து 742பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து மூவாயிரத்து 728பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, இரண்டு ஆயிரத்து 281பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.