தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் குணமடைவோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. மாநிலத்தில் நேற்று 5 ஆயிரத்து 344 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் நோய் தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 47 ஆயிரத்து 337 ஆக அதிகரித்துள்ளது.
நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 495 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 492 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 91 ஆயிரத்து 971 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 871 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:- அரியலூர் - 187 செங்கல்பட்டு - 2,424 சென்னை - 9,871 கோவை - 4,475 கடலூர் - 2,208 தர்மபுரி - 992 திண்டுக்கல் - 597 ஈரோடு - 1,144 கள்ளக்குறிச்சி - 869 காஞ்சிபுரம் - 1,061 கன்னியாகுமரி - 631 கரூர் - 472 கிருஷ்ணகிரி - 836 மதுரை - 792 நாகை - 944 நாமக்கல் - 934 நீலகிரி - 724 பெரம்பலூர் - 102 புதுக்கோட்டை - 817 ராமநாதபுரம் - 230 ராணிப்பேட்டை - 540 சேலம் - 2,260 சிவகங்கை - 279 தென்காசி - 640 தஞ்சாவூர் - 1,143 தேனி - 547 திருப்பத்தூர் - 638 திருவள்ளூர் - 1,720 திருவண்ணாமலை - 1,203 திருவாரூர் - 827 தூத்துக்குடி - 803 திருநெல்வேலி - 962 திருப்பூர் - 1,590 திருச்சி - 767 வேலூர் - 916 விழுப்புரம் - 984 விருதுநகர் - 316 விமானநிலைய கண்காணிப்பு - 48 ரெயில் நிலைய கண்காணிப்பு - 2