தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 150 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு தமிழகத்தில் இதுவரை 1,510 பேர் உயிரிழந்துள்ளனர்.
நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைக்கு பின் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 186 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 62 ஆயிரத்து 778 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,510 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டவாரியாக கொரோனா உயிரிழப்பு விவரம்: செங்கல்பட்டு - 119 சென்னை - 1,054 கோவை - 1 கடலூர் - 5 திண்டுக்கல் - 7 ஈரோடு - 5 கள்ளக்குறிச்சி - 4 காஞ்சிபுரம் - 33 கன்னியாகுமரி - 3 கரூர் - 3 கிருஷ்ணகிரி - 2 மதுரை - 62 நாமக்கல் - 1 புதுக்கோட்டை - 6 ராமநாதபுரம் - 20 ராணிப்பேட்டை - 5 சேலம் - 5 சிவகங்கை - 7 தென்காசி - 1 தஞ்சாவூர் - 2 தேனி - 7 திருவள்ளூர் - 94 திருவண்ணாமலை - 15 தூத்துக்குடி - 4 திருநெல்வேலி - 9 திருச்சி - 4 வேலூர் - 6 விழுப்புரம் - 17 விருதுநகர் - 8