வருமானவரித்துறை தகவல்... மாஜி அமைச்சர் வங்கி கணக்கு, சொத்துக்கள் முடக்கம்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அவரது வங்கி கணக்கு மற்றும் சொத்துக்களை முடக்கி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இதனை எதிர்த்து விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், வரி பாக்கியில் 20 சதவீதத்தை மட்டும் செலுத்தும்படி கடிதம் அனுப்பியும் விஜயபாஸ்கர் செலுத்தாததால் அவரது சொத்துக்களும், வங்கி கணக்கும் முடக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில் மனுதாக்கல் செய்துள்ளது.