இலங்கையில் கொரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை உயர்வு

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை உயர்வு... இலங்கையில் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 25 பேர் பூரண குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 1446 ஆக உயர்வடைந்துள்ளது. இதில் 756 கடற்படையினர் கொரோனா தொற்றிலிருநு்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,947 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 490 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 61 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.