போதை பொருள் புழக்கம் அதிகரிப்பது கவலையாக உள்ளது... மத்திய இணை அமைச்சர் வேதனை

திருநெல்வேலி: மத்திய இணை அமைச்சர் வேதனை... ''தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது,'' என மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார்.

துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் சுதந்திர தினத்தன்று சுதந்திரப் போராட்ட தியாகிகளின் நினைவிடங்களை கவுரவிப்பது குறித்து, மத்திய இணை அமைச்சர் முருகன் ஆய்வு செய்தார். துாத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் பாரதியார் மணிமண்டபத்தில், சுதந்திர தினத்தன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

ஆக., 20ல் திருநெல்வேலியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அவரது நினைவு தினத்தையொட்டி, சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதோடு, மத்திய அரசு சார்பில் தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இது தொடர்பாகவும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

முருகன் கூறுகையில், ''தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது. போதை பொருட்களை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.''மின்சார சீர்திருத்த சட்டத்தால் விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு இலவச மின்சாரம் நிறுத்தப்படும் என இதுவரை தெரிவிக்கப்படவில்லை. முழு சட்ட திருத்தமும் வந்த பிறகு தான் தெரியவரும்,'' என்றார்.