வாஜ்பாயால் இந்தியா தேசம் பெருமளவில் பயன்பெற்றுள்ளது .. பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: முன்னாள் பிரதமரும், பாஜகவின் முக்கியத் தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாயால் இந்த தேசம் பெருமளவில் பயன்பெற்று உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார். வாஜ்பாயின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரதமர் மோடி, இந்தியாவின் வளர்ச்சிக்காக வாஜ்பாயி முக்கியப் பங்காற்றி உள்ளார்.

இதையடுத்து 21 -ஆம் நூற்றாண்டை இந்தியா பல்துறை வெற்றிகளுடன் எதிர்கொள்ளச் செய்தார். இன்று நான் அவருக்காக அஞ்சலி செலுத்தும் 140 கோடி பேரில் ஒருவராக இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

பாஜகவின் முதல் பிரதமரான அடல் பிஹாரி வாஜ்பாயி, 6 ஆண்டுகள் கூட்டணி ஆட்சியை வெற்றிகரமாக நடத்தியதற்காக அறியப்பட்டவர். பாஜகவை நாடு முழுவதும் கொண்டு சேர்த்ததில் அவருக்கு பெரும் பங்கு உண்டு. வாஜ்பாயி தனது 93 வது வயதில் கடந்த 2018ஆம் ஆண்டு உயிரிழந்தார்.