மது போதையில் விமானத்தில் அநாகரிகமாக நடந்த இந்தியர் கைது

நியூயார்க்: இந்தியர் கைது... நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், மதுபோதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட இந்திய பயணி, விமானத்தில் மதுபோதையில் சக பயணியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, அவர் மீது சிறுநீர் கழித்ததாகக் கூறப்படுகிறது.

அவரது இந்த ஒழுங்கீனமான செயல் குறித்து, விமானம் தரையிறங்குவதற்கு முன்பாக டெல்லி விமானநிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் விமானம் தரையிறங்கிய பிறகு, சம்பந்தபட்ட நபரை தொழில் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.