அரையாண்டு தேர்வு எப்போது தொடங்குகிறது என்பது குறித்த தகவல்

சென்னை: தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து பள்ளிகளில் நேரடி வகுப்புகள் வழக்கம் போல செயல்பட தொடங்கியது. அந்த வகையில் இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு எப்போது தொடங்க இருக்கிறது என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

எனவே அதன் படி 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையும் அரையாண்டு தேர்வு நடைபெற இருக்கிறது.

இதனை அடுத்து 6 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 6 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையும், 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரையும் தேர்வு நடைபெறும்.

மேலும் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4.45 மணி வரையிலும் தேர்வு நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.