நான்கு ஆண்டுகள் ஆகலாம்... சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை இயல்பு நிலைக்குத் திரும்ப நான்கு ஆண்டுகள் வரையில் ஆகும் என சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் (IATA) தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, சர்வதேச அளவில் விமான சேவை முடங்கி உள்ளது.
இதனால், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தைக் காட்டிலும் நடப்பாண்டில் உள்ளூர்
விமானப் போக்குவரத்து சேவை சுமார் 86. 5 சதவிகிதமும், சர்வதேச விமானப்
போக்குவரத்து சேவை சுமார் 97 சதவிகிதமும் குறைந்துள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2023ஆம் ஆண்டில் விமானப்
போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் எனக் கூறப்பட்ட நிலையில், 2024
வரை தற்போதைய நிலை நீடிக்கலாம் என சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம்
தெரிவித்துள்ளது.