லைகா நிறுவனத்துக்கு தொடர்புடைய அமலாக்கத்துறையினர் சோதனை

சென்னை: அமலாக்கத்துறையினர் சோதனை... சென்னையில் லைகா நிறுவனத்துக்கு தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் செல்போன், சினிமா புரொடக்ஷன் என பல்வேறு தொழில்களில் லைகா குழுமம் ஈடுபட்டு வருகிறது. 2014ம் ஆண்டு தொடங்கப்பட்ட லைகா புரொடக்ஷன் கோலிவுட்டில் பல ஹிட் திரைப்படங்களை தயாரித்துள்ளது.

இந்நிலையில், தி நகர், காரப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட லைகா குழுமத்துக்கு தொடர்புடைய இடங்களில் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சட்ட விரோத பண பரிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.